சென்னை: சட்டப்பேரவை விதிகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும் என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சி துணை தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் மற்ற நபர்களை திருப்திப்படுத்தவே கட்சிகளால் வழங்கப்படுகின்றன. பழனிசாமி, பன்னீர்செல்வம் அளித்த கோரிக்கைகள் எனது ஆய்வில் இருந்து வருகிறது என்றார். உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்க பழனிசாமி தரப்பு கோரும் நிலையில் சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.